இஸ்கண்டார் புத்ரி, 01 மே (பெர்னாமா) -- கடந்த புதன்கிழமை சுமார் ஐந்து மணி நேரத்திற்கு, பள்ளி வேனில் விடபட்டுச் சென்ற ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நண்பகல் மணி 12 அளவில் சம்பந்தப்பட்ட அச்சிறுவன் வேனில் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டதாக, இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.
அன்றைய தினத்தில் காலை மணி 7.30 அளவில், தாமான் புக்கிட் இண்டாவில் உள்ள பாலர் பள்ளியின் முன்புறத்தில் வேன் ஓட்டுநர் மாணவர்களை இறக்கியபோது, அச்சிறுவன் விடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணம் குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு, புதன்கிழமை மாலை, 56 வயதான வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி குமரேசன் கூறினார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம் செக்ஷன் 31(1)(a)-இன் கீழ், தொடர் விசாரணைக்காக மே 7-ஆம் தேதி வரையில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)